Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, July 8, 2010

கடலும் என் காதலும் - காதல் கவிதை

அந்திவானம் 
அலையில்லாக் கடலை அணைத்து 
சிவப்பை பூசிக்கொள்ள 
அதைக் கண்ட நானும் சிவந்தேன்
நீ அருகில் இருப்பதாலேயே..!

அசுர அலைகள் நடுவே 
தத்தளிக்கும் படகாக நான்!
கருவண்டின் இருளில்
ஆழ்கடல் அமைதியாக நீ!
கண்ணீரால் உயர்த்துகிறது
கடல் மட்டத்தை படகு!

****
உன் வலையில் வலிய 
சிக்கிய மீனாக நான் இருக்க
என்னை சிக்கிய சிப்பிக்குள் 
முத்தாய் நீ கருதினாயே!
****
அன்று
கடற்கரையில் நாம் இருவர் நடந்தும்
ஒருவரின் பாத சுவடுதான்!
மாலை வெயிலில் நாம் இருவர் அமர்ந்திருந்தும்
ஒரே நிழல்தான்!
இன்றும்
ஒருவரின் சுவடுதான்!
ஒரே நிழல்தான்!
ஆனால் தனிமையில் நான்!!!

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts