உன்னைப் பிரிந்தே எந்தன்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே
செல்லம் நிறை சொற்களாலே
கொஞ்சும் ராசாத்தி - என்னைக்
கனவில் கூடச் சுத்தி வரும்
செல்வச் சீமாட்டி
நட்சத்திரக் கண்கள் எந்தன்
பகலை இரவாக்கும் - அகல
நெற்றிநடுக் குங்குமச் சூரியன்
பகலில் நிலவாகும்
காதல் நிறை கண்களாலே
கதைகள் உரைப்பாயே - அதனைக்
கற்றுக் கொண்டு சீண்டயில்; அழகு
காட்டிப் பழிப்பாயே
நெடுநாள் பிரிவை உடனே போக்க
விடுமுறை நாடுகிறேன்
விடுப்புகள் முடிந்து
வேலைக்கு மீள்கையில்
நோய்நொடி தேடுகிறேன்
புற்கள் நுனிப் பனித் துளி போல
நானும் வருவேனே - எந்தன்
பாசம் கொண்ட ரோசாவே நீ
வாடிப் போகாதே
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment