ஒரு உயிர் பூத்த
நெருப்பாகத் தான்
என்னுள் நுழைந்தாயடி..
என் உயிரின்
ஆழம் வரை
நினைவுகளாய் பற்றி எரிந்தாயடி..
உன் ஒரு சொல்
வார்த்தைக்காய்
துடிக்க வைத்தாயடி..
உன் கடைக்கண்
பார்வைக்காய்
நாலும் தவித்தேனடி..
நீ சுற்றித் திரிந்த
தெருவெல்லாம்
நானும் அலைந்தேனடி..
நீ தொட்ட
பொருளெல்லாம்
சேர்த்து வைத்தேனடி..
நீ கோரும்
விருப்பத்திற்கே
வாழ்வை சமைத்தேனடி..
நீ இல்லாத
நொடியையும் கூட
சபித்தேனடி..
உனக்குப் பிடிக்காத
என்னையும்
வெறுத்தேனடி..
காதல் காதல் என்றே
உன்னில் -
கரைந்தேனடி..
சாதல் சாதலொன்றும்
பெரிதில்லை -
நீயின்றி நிச்சையம்; இறப்பேனடி..
நீ மட்டும்
உண்டென்றால் -
உண்டென்றால்ல்ல்ல்....?
வேறென்ன -
இனிக்க இனிக்க நகரும்
தருணங்களில் - இரண்டு கைவிரித்து வானில்
பறப்பமோடி;
உலகத்தை நம் சிரிப்பொலியில்
நித்தமும்.. நித்தமும்.. நிறைப்போமடி!!!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment