உதிரும்
முத்துப்பரல்களை விடவா
காணாமல் போன
கால் கொலுசு
கவிதை பாடிவிடப்போகிறது?
*******
காத்திருந்து காத்திருந்து
நீயும், நானும்
எத்தனையோ முறை
ஏமாந்து போனாலும்
காத்துக்கிடக்கிறது
நமக்காக காதல்.
*******
அமுதம் சிந்தும் வார்த்தைகள்
மட்டுமின்றி அவ்வப்போது
நஞ்சும் கக்குகிறாய்
ஆனாலும்
எப்போதும் எனக்கு
மாணிக்கம் நீ.
No comments:
Post a Comment