விடிந்தாலும் விழமாட்டேன் என்பாள்
ஒளிவீசிக்கொண்டு...!
எனக்குள் அவள் மேகம்
கலையும் முன் தருவேன் என்பாள்
கண்களிலே ஈரமதை...!
எனக்குள் அவள் வானம்
தெரிந்தாலும் தொலைவிலே என்பாள்
என் இதயத்திலிருந்து...!
எனக்குள் அவள் நாதம்
உறக்கதிலும் ஒலிப்பேன் என்பாள்
மாறாத நினைவுகளை...!
எனக்குள் அவள் குழந்தை
பிடிவாதம் கொள்வேன் என்பாள்
"பிரியத்தான்" வேண்டுமென்று...!
No comments:
Post a Comment