Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Sunday, July 18, 2010

நீ கொடுத்த காதல் - காதல் கவிதை

வானத்து மேகமாய்
வண்ணங்களை காட்டி
களைந்து சென்றது காதல்
சுட்டெரிக்கும் வாழ்க்கையில்
மேகம் தரும் நிழலாய் நீ
நிழல் கரைந்தது நிஜம் சுடுகிறது
அடிவானத்து மேகம் பார்க்குபோது
நீயும் நானும் கொஞ்சி விளையாடிய
வெட்கத்தின் சாயம் பூசிகொண்டதே எனதோணும்
மேகமும் காதலும் ஒன்றென தெரியாது
ஆனால் நீயும் காதலும் ஒன்றென தெரியும்
மேகம் மழை கொடுத்து கரையும்
நீ காதல் கொடுத்து காணமல் போகிறாய்
மேகம் கொடுத்த மழை
மண்வாசம் விட்டு செல்லும்
நீ கொடுத்த காதல் – என் உயிரை
எடுத்துசென்றதா கொடுத்து சென்றதா ?..
நிழல் கொடுக்கும் வான்மேகம்
காதல் கொடுக்கும் உன் வனப்பு
வெண்பஞ்சு பட்டுடுத்தி சுட்டெரிக்கும்
சூரியன் போல் என் இறுதிஊர்வலத்திற்கு
உடுத்திவருவாயோ கார்முகிலை கனகட்சிதமாக


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts