Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Saturday, July 24, 2010

என்னவளே - காதல் கவிதை

காலைச் சுடருமல்ல மாலைவரு மதியுமல்ல
பாகாய்க் கொடுக்கின்ற பாங்கான சுவையுமல்ல
சாலை மரமுமல்ல சந்தனக் குளிருமல்ல
வாலைக் குமரியல்ல வாசமுள்ள பூவுமல்ல
ஆனாலும் ஆனாலும் அத்தனையும் நீயானாய்

எல்லாம் இருந்தாலும் அன்போடு சொல்லிக் கொள்ள
ஒன்றிரண்டு குறைகளுண்டு என்னவென்று கண்டு கொள்வாய்
வழக்கத்தில் வழுவிருந்தால் விலக்குவதில் தவறல்ல
பழக்கத்தில் கொள்வதெல்லாம் பக்குவமாய்க் கூடிவரும்

இலக்கங்கள் பார்த்து வெறும் கலக்கங்கள் கொள்ளாதே
மூடப் பழக்கத்தின் வழக் கொழிப்பாய் விளக் கொளியாய்
கோபத்தைக் குறை அது கூட உன் குறையடி
மாமன் மகள் அல்ல மாமகளாய்த் திகழ்ந்திடுவாய்


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts