ஒரு நாள்
எங்கேயோ அழைத்துச் செல்கிறாய்
நீண்ட தூரம்
நடக்க முடியவில்லை என்றேன்
என் கையைப் பிடித்துக்கொள் என்றாய்
பிடித்து நடந்தேன்
உற்சாகத்தோடு...
அழகான கவிதையாய்!
மற்றொரு நாள்
ரம்யமான மாலை வேளை
மொட்டை மாடியில்
நீயும் நானும்.
வருடிச்செல்லும் தென்றல்
என் கூந்தலினைக் கலைக்க,
முகத்தில் விழுந்த முடியை
அழகாக விலக்கினாய்
உன் விரல்களால்...
ரசனையான கவிதையாய்!
அன்றொரு நாள்
எதையோ எதிர்பார்த்து
என் விரல்கள்
உனது விரல்களைப்
பிடித்தன மிக அழுத்தமாக
உடனே என்னை வசீகரிக்கும்
சிறிய புன்னகையுடன்
ஆழமான ஒரு பார்வை
பார்த்தாய் - அழகான
அந்த இரவு வெளிச்சத்தில்...
அர்த்தமுள்ள கவிதையாய்!
இன்னொரு நாள்
இதழ்களின் வழியே
உள் நுழைந்து
உயிர் தேடிச் செல்லும்
உ(எ)ன் முத்தம்....
உயிருள்ள கவிதையாய்!
கவிதைக்குப்
பொய் அழகாம்
என் கவிதையும் கூட ... ஆனால்
பொய்யான நிஜம்
என் கனவுகளே
இன்று கவிதையாய்!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment