Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, June 9, 2010

அவள் காதல் கவிதை - Tamil Kadhal Kavithai


எல்லோருக்கும்
முகம் காட்டும் கண்ணாடி
உனக்கு மட்டும்
நிலவு காட்டுவதெப்ப‍டி?
உனக்கான உடைகளை
அளவெடுத்து தைக்கிறாயா?
அழகெடுத்து தைக்கிறாயா?
சந்தித்த கணத்தில்
கட்டித்த‍ழுவுகின்றன!
காதலர்கள்…
நாமா? நம் உதடுகளா?
மயிலிறகு சேகரிக்கும்
உனக்குத் தெரியுமா…
காற்றில் உதிரும்
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது?
அம்மா பெய‌ர் என்ன‌வென்று கேட்டால்
“அம்மா” என்றே சொல்லுகிற‌ குழ‌ந்தையைப்போல‌
உன்னை ஏன் பிடித்திருக்கிற‌தென‌க் கேட்டால்
உன்னைப் பிடித்திருக்கிற‌து
என்று மட்டுமே சொல்ல‌ முடிகிற‌து.
அச்ச‍டித்துக் கொடுத்த‍ இந்த‌ ஐந்தையுமே
‘சுமாராத்தான் இருக்கு’ என்றெழுதி
திருப்பிக்கொடுத்து விட்டாள்!
மீண்டும் வாசித்துப் பார்த்தேன்.
அச்ச‍டித்த‍ எழுத்துக்க‍ள்
எல்லாமே சுமாராகத்தான் இருந்தன
அவள் கையெழுத்துக்கு அருகில்!



Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts