Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, June 30, 2010

கனவில் அவள் - காதல் கவிதை

யாரோ துரத்துகிறார்கள்
அல்லது
எழுதாத தேர்வில்
நேரம் தப்பிய அதிர்ச்சி
உச்சிக்குக் கொண்டுபோய்
உருட்டி விடும் எதிரி யாரென்று
பல கனவுகளுக்குப் பின்னும்
தெரியவில்லை.

நேரில் பேச இயலாமல் போன
சின்ன வயசு சிநேகிதி
கனவில் அநாயசமாய்
ஒரு புன்னகை
வீசிப் போகிறாள்

சில நாள் கனவில்
அவள் பேசியது
கண் விழித்தபின்
மறந்து போகிறது

கனவுகள் எதுவானாலும்
அவற்றின் வரவு
ஒவ்வொரு இரவின் தொடக்கத்திலும்
மனதின் எதிர்பார்ப்பாகிறது

கனவுகளற்ற இரவுகள்
அதனை அடுத்த பகல்களில்
நினைவின் உறுத்தல்கள்!


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts