யாரோ துரத்துகிறார்கள்
அல்லது
எழுதாத தேர்வில்
நேரம் தப்பிய அதிர்ச்சி
உச்சிக்குக் கொண்டுபோய்
உருட்டி விடும் எதிரி யாரென்று
பல கனவுகளுக்குப் பின்னும்
தெரியவில்லை.
நேரில் பேச இயலாமல் போன
சின்ன வயசு சிநேகிதி
கனவில் அநாயசமாய்
ஒரு புன்னகை
வீசிப் போகிறாள்
சில நாள் கனவில்
அவள் பேசியது
கண் விழித்தபின்
மறந்து போகிறது
கனவுகள் எதுவானாலும்
அவற்றின் வரவு
ஒவ்வொரு இரவின் தொடக்கத்திலும்
மனதின் எதிர்பார்ப்பாகிறது
கனவுகளற்ற இரவுகள்
அதனை அடுத்த பகல்களில்
நினைவின் உறுத்தல்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment