என்னருகே நீயிருந்தாய்!
காலை நேரத்தில்
காலாற நடந்து போகும்
கடற்கரை மேகங்கள்
காணும் போதும்…..
உன்னைத் தீண்டிய தென்றல்
என் உள்ளம் தீண்டி
உன் வரவு சொல்லிப்
போன போதும்…..
‘என்ன சொல்லிப்
போனது தென்றல்?’
என மரங்கள் எனை
ஏக்கமாய் விசாரித்த போதும்……
அம்சமாய் அசைந்து போகும்
அந்திச் சூரியன் எனை
அருகே அழைத்து- தன்
அனுபவங்கள் சொன்ன போதும்…..
மெலிதான
மழைத்துளிகள் – என்
மேனி நனைத்த போதும்……
எழிலான வானவில்
என் கண்கள் பார்த்து
கவி வாசித்த போதும்……
அரைகுறை ஆடையுடன்
அனுதினமும் உலாவரும்
பால்நிலா எனைப்
பரிவோடு அழைத்து –என்
காதல் கதை
கேட்ட போதும்…….
சொன்னதும்
சுற்றியுள்ள விண்மீன்
கூட்டம் கூட்டிச்
சத்தமாய்ச் சிரித்தபோதும்….
கைகளில் உன் பேரெழுதி
கன்னத்தில் வைத்துக்
கண்மூடும் போதும்……
நீ
எனக்கு
மிக
அருகில்
இருப்பதாய்
உணர்கிறேன்……
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment