கல்லூரி முடித்து
பிரிய மனமில்லாமல் பிரியும்
மாணவனைப் போல்
என் படுக்கையிலிருந்து பிரிந்தவளிடம்
ஒரு முத்தம் கேட்டேன்
சிணுங்கி எழுந்தாள்
ஒரு சிணுங்கல் கேட்டேன்
வெட்கி சிவந்தாள்
ஒரு வெட்கம் கேட்டேன்
தலையில் செல்லமாய் இடித்தாள்
அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம் தான்....
***
நீ வண்ணப்பொடிகளைக் கொண்டு
மும்முரமாய் கோலம் போடுகையில்
"ஒரு வண்ணமயில் கோலம் போடுதே!"
என்றபடி விரலால் உன் கன்னத்தில்
மஞ்சள் கோடு போட்டேன்
நீ உதட்டைப் பிதுக்கி
"சீ..." எனும்போது
உன் வெட்கமும் கோபமும்
சேர்ந்து பொங்கி
சிவந்து போனது மஞ்சள் கோடு...
அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம்தான்....
***
கடற்கரை இரவொன்றில்
நீ வரும்வரை நிலாவை
ரசித்திருந்தேன்
அதை அறிந்த நீ
என்னை முறைத்து
"அவளோடு என்ன பேச்சு?"
என்றாய் கோபமாய்..
"அந்த வெண்ணிலா
கருநிலவாய் உருமாறி
உன் கண்களில் ஒன்றாய்
ஆக அனுமதி கேட்கிறது" என்றேன்
நொடியில் சிவந்தாய்
பிறகு சத்தமாய் சிரித்தாய்..
அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம்தான்..
***
Thursday, June 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment