பால்கனி சுவற்றில்
வெட்சி மலர் போல்
உன் விரல்களைப்
பூக்கவிட்டு நிற்கிறாய்...
உன்னருகே வந்து
உன் இதழ் பிரியும்
அத்தனை வார்த்தைகளையும்
என் செவிகளில்
ஒன்று சேர்த்து நிற்கிறேன்...
மலர் தாவும் வண்டாய்
என் விரல்கள், சுவற்றில்
பூத்த உன் விரல்களில்
வந்தமரமுயல,
அதை முன்பே எதிர்பார்த்தவளாய்
கூட்டுக்குள் அடைந்த நத்தைபோல்
உன் விரல்களை
இழுத்துக் கொண்டு
எதிர்த் திசையில் நிலாமுகம் திருப்பி
இதழோரம் மெல்லிய
புன்னகையைத் தவழ விடுகிறாய்...
நீ தவழவிட்ட
பொன்னகையில்
மறைந்து நின்ற
ஊடல் முத்துக்களை ரசித்தவாறே
என் இதழ் தவறிச்
சிந்திய அசட்டுச்சிரிப்பை
சேகரித்துக் கொண்டிருந்தேன்
நினைவடுக்குகளில்...
Monday, June 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment