Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Tuesday, June 29, 2010

உன்னோடு இருந்திருப்பேன்... - காதல் கவிதை

ஈன்றவள் ஈந்ததோ ?
இல்லை . . .
தகப்பன் தந்ததோ ?
இல்லை . . .
உறவுகள் உணர்த்தியதோ ?
இல்லை . . .
உற்றார் உரைத்ததோ ?
இல்லை . . .
நட்புகள் நவின்றதோ ?
இல்லை . . .
பால்ய வயதின் பழக்கமோ ?
இல்லை . . .
பள்ளியில் பயின்றதோ ?
இல்லை . . .
பருவ வயதில் படர்ந்ததோ ?
இல்லை . . .
பல்கலையில் படித்ததோ ?
இல்லை . . .
பல பிறப்பில் பதிந்ததோ ?
இல்லை. . .

பின் எப்போது காதலுற்றேன்..
உன்னைக் கண்டவுடன் காதலென்று சொல்ல . . .?

உன்னை நான் கண்ட நாள் முதல் காதலுற்றேனா ?
இல்லை.. நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா ?

எனக்குள் காதல் இருந்ததால் காதலுற்றேனா ?
இல்லை . . .

உன் காதலால் காதலுற்றேனா ?
இல்லை . . .

கருவுற்றபோதே காதலுற்றேனா ?
இல்லை . . .

காதலுற்றதால் கருவானேனா ?
இல்லை . . .

. . . நான் எப்போது காதலுற்றேன் ? 







Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts