Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, October 20, 2016

ஒரு வரி காதல் கவிதைகள் - காதல் கவிதை

Image result for love

உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் 

ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! 



அவள் என்னை நினைத்த போது சூழ்நிலை காரணத்தால் என்னால் 

அவளை நினைக்க முடியவில்லை...!!!

இப்போது அவள் நினைப்பு என்னை வாட்டுகிறது அவளுக்கு தெரியாமல்

ஓர் இன்பமான வலி...!!!




காதல் என்பது மூன்று வார்த்தை தான் பெண்ணே 

அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த 

பிறகே தெரிந்து கொண்டேன்...!!! 




காதல் கசப்பாக தான் இருந்தது 

உன்னை காணாத வரையில்....!!!




காதல் என்ற கேள்விக்கு உன் கண்கள் தான் பதில் சொல்ல வேண்டும் 

என் சகியே....!!!




கவிதை எழுத உன் பார்வை மட்டும் போதும் எனக்கு..!!!




காதலுக்கு கண்கள் இல்லாமல் இருக்கலாம் பெண்ணே 

உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்...!!! 




காதலை வெறுத்தா நான் உன்னை பார்த்த முதல் நேசிக்கிறேன்

அதன் வலி சுகமாய் இருந்ததால்...!!!




சாயும் காலம் உன்னை பார்த்த நான் என்னை அறியாமலே சாய்ந்து 

போனேன்...!!! 




கண்கள் வெறும் பார்க்க மட்டும் என்று நினைத்தேன் 

உன்னை பார்த்த பிறகு தான் அதன் அருமையை உணர்ந்தேன்...!!! 



நீ அழகானவள் என்று என்னுள் தோன்ற வைத்தது உன் பார்வை..!!!


உன்னை கண்ட பிறகு காதல் என்னுள் பிறக்கவில்லை 

விதைக்கபட்டது...!!!




உன் நெற்றிப்பொட்டு...!!! 

என் ஒரு துளி ரத்த சொட்டு...!!! 



உன் கண்ணின் மேல இருக்கும் புருவம் எனக்கு வானவில்லை 

நினைபடுத்துகிறது....!!!



உன் கன்னக்குழியில் தெரிந்தே விழுந்தன என் கோலி போன்ற 

கண்களால்...!!!




உன்னில் என்னை கண்டதால் என்னவள் நீதானோ என்று நினைத்து என் 

கண்கள் உன்னை தேடின...!!!




உன் காதில் இருக்கும் கம்பலில் ஒரு ஜோடி பறவை ஊஞ்சலாடுவதை 

கண்டேன் பெண்ணே...!!!




உன் இடையின் மடிப்பை கண்டு நான் மடிந்தே போனேன் பெண்ணே...!!!




நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் பெண்ணே...!!! 

மறந்தால் மடிவேன் 



நான் உன்னை காதலிக்கிறேன் என்றதும் நீ சிரித்தாய் நான் 

வெட்கப்படவில்லை அந்த சிரிப்பு முடிந்ததும் என் மீது காதல் வரும் 

என்று நம்பிக்கை கொண்டேன் 



நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் பெண்ணே...!!! 

மறந்தால் மடிவேன் 




நான் கண்ணாடியை பார்த்ததும் கண்ணாடியின் பிம்பம் என்னை 

திட்டுகிறது  ஏன் அவள் இதயத்தை திருடினாய் என்று....!!!




தனிமையில் இருந்தாலும் எந்தன் சிந்தனை நீயாகவே இருக்கிறாய்

பெண்ணே...!!! 




உன்னில் நான் இல்லை என்றாலும் என்னுள் நீ இருக்கிறாய்...!!!




உன் கண்களை காணும் போதெல்லாம் என் இதயம் அழுகிறது 

பெண்ணே...!!!



நான் உனக்கு கொடுத்த முத்தம் காமம் நினைத்து கொடுக்கவில்லை

உன் மீது வைத்திருக்கும் அன்பை கலந்து கொடுத்தேன்...!!!




கண்கள் மூடி படுத்தாலும் மூடாமல் உன்னை உன்னையே நினைத்து 

கொண்டிருக்கிறது என் சகியே...!!!




உன்னை மறக்க நினைக்க என் மனம் மரணத்தையே நாடுகிறது...!!!



என் உயிர் உனக்காக வாழவில்லை நம் காதலுக்காக வாழ்கிறது 

பெண்ணே...!!!




காலம் நம்மை சேர்க்கா விட்டாலும் 

விதி நம்மை சேர்க்கும் என்று நம்புவோம் பெண்ணே

அஞ்சாமல் என்னுடன் வா...!!!



மழையில் குடையில் ஒன்றாக நடக்க வேண்டும் என்று நினைத்தேன் நீ 

என்னுடம் வரும் போது வானம் என்னை ஏமாற்றிவிட்டது...!!!




ஏமாற்றங்கள் பல கண்டேன் உன்னை காதலித்தால் 

என்று நினைத்தேன் நீ என்னுடன் சேர்ந்ததம் ஏமாற்றமே காதலால் 

எமன்றது...!!! 




எனக்காக நீ அல்ல உனக்காக நான் அல்ல
நமக்காக என்று சொல்ல வைத்தது உன் கண்கள்...!!!




பல வலிகள் தாங்கிய என் மனது நீ என்னை காதலிக்கவில்லை என்றதும்

தாங்க மறுத்துவிட்டது...!!!




உனக்கென நான் இருக்கிறேன் எனக்காக நீ இருக்கிறாய் 

நமக்காக இந்த காதல் உள்ளது நம்மை சேர்க்க...!!!



காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல விடையில்லா கேள்வி...!!!

எனக்கு பதில் உன் கண்கள் 




பல முறை என்னை வெறுத்த நீ திடீரென காதலித்தாய்...!!!

அதற்கு காரணம் நான் அல்ல நீ தான் பெண்ணே 





சுகமான வலியை உணர்ந்தேன் நீ என்னை கண்ட நாள் முதல்..!!!




நான் உன்னை காதலிக்க ஒரே ஒரு காரணம் தான் 

உன்னில் நான் இருப்பதை உணர்ந்ததால் 




கவிதை எழுத காதலிக்க வேண்டிய அவசியம் இல்லை அதை 

உணர்ந்தாலே போதும்....!!!



நீ எனக்கு கொடுத்த முத்தம் காதலை மறந்து உன்னை 

நினைவுபடுத்தின...!!!




நான் ஏன் இது போன்று எழுதுகிறேன் என்பது என்னவளுக்கு மட்டுமே 

தெரியும்.....!!!!


காதல் கவிதை-44

விண்ணையும் தாண்டி வருவேன் பெண்ணே...!!!

ஆனால் கனவில் மட்டும் 


காதல் கவிதை-45

காலையில் வரும் சூரியனை வெறுத்தேன் முதல் முறை உன்னை 

நிலவின் வெளிச்சத்தில் பார்த்ததால்...!!!




நீ என்னை காதலிக்க என் இதையத்தை உன்னிடம் அடகு வைத்தேன்...!!! 



உன் மனதில் இடம் பெற பல பொய்களை பேச வேண்டியுள்ளது

பெண்ணே...!!! மன்னிப்பாயா 



என்னுள் தோன்றிய காதல் உன்னில் வளர்ந்து நம்மில் முடியவேண்டும்

பெண்ணே....!!! 



பகலும் இரவும் உந்தன் நினைவுகள் மறக்க நினைத்தால் பகலிரவு 

இல்லை என்றே தோன்றுகிறது...!!! 


காதலுக்கு கவிதை எழுதிய நான் உன் மனதில் அதை பதியவைக்க 

மறந்துவிட்டேன் பெண்ணே...

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts