Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Tuesday, November 13, 2012

நீ வந்திருக்க வேண்டாம் - காதல் கவிதை


நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.....


Bookmark and Share

Wednesday, September 26, 2012

இந்த ரோஜாவை - காதல் கவிதை

இந்த ரோஜாவை வாங்குபவள்
எந்த மகராசியோ என
என் உள்மனதில்
எண்ணங்கள் எகிறிக்கொண்டிருக்கின்றன ,

எவளும் வாங்கமாட்டாள் என '
எகத்தாளப் பார்வையுடன்
சில காதலன்கள் கிளம்புகிறார்கள்
காதலிகளை இழுத்துக்கொண்டே

மாலை வரத்தொடங்கிய
வேளையில்தான் புரிந்தது
இந்த வருடமும் .
காதலி கிடைப்பதற்கில்லையென,


இப்பொழுது நினைக்கிறேன்
அம்மாவின் தலையில் வைத்து
அழகு பார்த்திருக்கலாம்
இந்த ரோஜாவை ...


Bookmark and Share

Friday, September 7, 2012

உன்னில் உறைந்துபோனேன் நான்! - காதல் மொழி


தட்டுப்பட்டது நானெனில் அச்சம் தவீர்; பத்திரமாய் இருக்கு உன் மனது என் உயிர்கூட்டிற்குள்!

அச்சம் என்றெல்லாம் ஒன்றுமில்லை; மிச்சமாய் என்னுள் ஏதும் இல்லை; உன்னைத்தவிர!



நிலாப்பெண்ணின் மொத்தமும் நானானேன்! எந்தன் சித்தம் முழுதும் நீயானாய்!


எப்படி என்னுள் நுழைந்தாயோ அப்படியே என்னுள் நிறைந்தாய்! 



வார்த்தைக்குள் என் அன்பு அடங்கிவிடும் எனில் வானம் மூன்றெழுத்தில் முடிந்து விடும்.


உன் அன்பு கண்டு உறைந்துபோய் நிற்கிறேன் - வார்த்தைகளின்றி!



வார்த்தையில் என்ன இருக்குஉன் பார்வையில் மொத்தம் அன்பும் வழிந்திடும் போது!


உன்னில் உறைந்துபோனேன் நான்! பிறகு வார்த்தையெங்கே? பார்வையெங்கே?




உறைந்து போன உனது விழிதனில் இளகிய பார்வையொன்றைக் கண்டேன்! மருகி கிடந்த எம்மனதும் கொஞ்சம் உருகிடக் கண்டேன்!


அதிகமாய் உருகிட வேண்டாம்! உள்ளிருக்கும் என் மனதிற்கு உறுத்திடக் கூடும்!



எம்மனதை இழந்தேனும் உன் மனதைக் காப்பேன்.


ஏற்கனவே என்னிடம் இழந்த மனதை எப்படித் திரும்பவும் இழப்பாய்?



உன்னை மீட்க வேண்டும் எனில் மீண்டும் எம்மனதை மீட்டு உன்னைக் காப்பேன்!


உம்மனது இருப்பதோ என் உயிர்க்கூட்டினுள் - என் உயிரை மாய்த்து பின் எடுத்துக்கொள் தேவையெனின்!



உனை மாய்க்கையில் மடிவது நாமல்லவோ?


மடிவது நாமாயினும் வாழட்டுமே காதல்! 


நம்மோடே மடிந்து விடாதோ காதல்? காதல் இல்லாமல் நாம் எப்படி?


பிரிதலிலும் சேர்தலிலும் இல்லை காதல் - எல்லாம் அவரவர் மனதினில்! 



பிரிவென்பதும் சேர்தல் என்பதும் இல்லை காதல் :-)


இது கள்ளாட்டம் - திரும்பவும் எல்லாத்தையும் அழி, முதலிலிருந்து.....


Bookmark and Share

Wednesday, August 29, 2012

சிந்தனை துளிகள்


ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...
புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்! -அப்துல் கலாம்

தொட்டுவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை..அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை-பில்கேட்ஸ்

வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு...வெற்றி வந்த பின்பு 
குதிரையை விட வேகமாய் ஓடு...அப்போது தான் வெற்றி உன்னிடத்தில் நிலைத்திருக்கும்-விவேகானந்தர்

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். – ஐன்ஸ்டைன்

திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான் அஸ்திவாரம். - எம்.ஜி.ஆர்

வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள். - சிவ் கெரோ

உங்களைப்பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் உங்களை விரும்புவன்; நண்பன். - எல்பெர்ட்ஹெப்பர்ட்
Top of Form

நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு செயலிலும் முழு விழிப்புணர்வோடு உங்கள் மனமும் செயலும் கலந்து ஒன்றி இருந்தால் அதுதான் உண்மையான தியானம்! - ஓஷோ ரஜனீஷ்

ஒரு மனிதனின் உண்மையான செல்வம் அவன் இந்த உலகில் செய்யும் நல்ல விடயங்களாகும்.- முஹம்மது நபி (ஸல்)

சமாதானத்தை படைபலம் கொண்டு மேற்கொள்ள முடியாது. அதை புரிந்துணர்வு மூலமே பெற்று கொள்ளலாம் - அல்பர்ட் ஜன்ஸ்டைன்

அறிந்து கொள்வது போதாது, அதை செயல்படுத்த வேண்டும். ஆசைப்படுவது போதாது, அதை கண்டிப்பாக செய்ய வேண்டும். - ஜொனதன் வுல்ப்கெங்க் வொன் கோதே

விடா முயற்சி, ஆர்வம், அடக்கம் ஒழுங்கு ஆகியவை மூலமாகத் தம்மை ஒரு தீவு போல் ஆக்கிக்கொண்டு வெள்ளத்தில் சிக்கிக் சிக்கிக்கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் அறிஞர்கள் -புத்தர்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.


Bookmark and Share

Tuesday, August 14, 2012

சுதந்திர தினம் - சுதந்திர தினம் கவிதை

எல்லையாய் கோடாய்
இருக்குதே சுதந்திரம்
இருப்போர்க்கு நிலைத்திடவே...

எலலையிலே சுதந்திரம் இல்லாமலே
வீடு விட்டு, நாடு விட்டு
தன்னலத்தை பொதுவிலிட்டு
போராடுவோர் பலருண்டு...

எல்லையில்லாமல், போராடாமல்
சுதந்திரமாய் அவரும் இருக்கும் தினமே
உண்மையாய் சுதந்திர தினம்...

ஜெய்ஹிந்த்!



என் சுதந்திரம்

எல்லையிலே இருக்குது 
எட்டிப்பார்த்தில்லை...!

வீட்டுப் பூட்டில் இருக்குது 
திறந்து விட்டதில்லை...!

மனதிலிருக்குது 
பகிர்ந்ததில்லை...!

நாட்டு ஏழ்மையிலிருக்குது 
எண்ணிப்பார்த்தில்லை...!

உணர்விலெல்லாம் இருக்குது 
உணர்த்திக்கொண்டதில்லை...!

கேட்ட சொல்லிலிருக்குது 
சொல்லிக்கொண்டதில்லை...!

வரலாறாய் இருக்குது 
வாழ்ந்ததில்லை...!

கிடைத்ததில் இருக்குது 
விட மனமில்லை....! 


எல்லையிலே சுதந்திரம்

இன்று வரை எல்லையாய் இருக்குது சுதந்திரம்...
எல்லை மீறாதிருக்க மீண்டுருக்கும்...
எல்லை மாறாதிருக்க நமக்கிருக்கும்...
மற்றவர் எல்லை நமக்கு புரிந்திருக்க,
எல்லாருக்கும் என்றும் நிலைத்திருக்கும்...


Bookmark and Share

Sunday, July 15, 2012

நீ என்றென்றும் மாறமாட்டாய் - காதல் கவிதை



எனக்குள்ளே உன்னைப்பற்றி வரைந்த 

ஓவியத்தை தினம் தினம் 
கனவில் மீட்டி கண்டுகொள்கின்றேன் 
நிழல்படம் சிலநொடி நேர்த்தியற்றதாக இருக்கலாம் 
நிஜம் நீ என்றென்றும் மாறமாட்டாய்......!!



Bookmark and Share

Monday, July 2, 2012

உன் கண்களில் தேடினேண் - காதல் கவிதை


அன்பே உன் கொஞ்சல் விழி என்
மனதை உயர பறக்க விட்டது
உன் பட்டு கரங்களால்
என்னை வருடினாய்
மறந்தேன்
ஆம் மறந்தேன்
இந்த பொண்ணான தருணத்தை
மீண்டும் இப்பூவுலகில் காண
உன் கண்களில் தேடினேண்
அவை அன்பு முத்தங்களாய்
கிடைத்தது உன்னிடம்!

Bookmark and Share

Monday, June 4, 2012

அழகைக் கொண்டே ஆளைக் கொல்கிறாய் - காதல் கவிதை


னடி ! இப்படி அழகானாய் ?
அழகால் என்னைத் தின்கின்றாய்.
சொல்லடி அன்பே ஆருயிரே!
சாகவும் தோணுதே காதல் தானோ!

ரைநொடி வாழ்தால் கூட - உன் 
அரவணைப்பில் வாழ வேண்டும் .
அடுத்தநொடி இறந்தால் கூட - உன்
மடி மீது நான் சாக வேண்டும்.

பிரம்மன் செய்த பிழையோ- நீ
பெண்கள் கூட்டத்துத் தேவதையோ ! - என்
உயிரைக் குடிக்கும் மோகினியோ - பலர்
உயிரைக் காக்கும் தேவதையோ.
சிரிக்காமல் சிரிப்பது எப்படியோ! - என்னுயிரைக்
குடிக்காமல் குடிப்பது எப்படியோ!
அழுகின்ற பொழுது அணைத்திடடி - நான்
அணைக்கின்ற பொழுது அச்சம் தவிர்த்திடடி.

கிறுக்கன் என்னைக் கவிஞனாக்கினாய் ;
கவிஞர்கள் பலரைக் கிறுக்கனாக்கினாய்.
அழகைக் கொண்டே ஆளைக் கொல்கிறாய்;
அகிம்சைக் கொள்கை ஏற்க மறுக்கிறாய்.
முத்தம் கேட்டு முயன்றிடவில்லை -உன்னை
நித்தம் பார்க்க முறையிடவில்லை.
சத்தம் இன்றி நுழைந்தாயே - என்னை
நித்தம் நீயே வென்றாயே ! 


Bookmark and Share

Wednesday, May 23, 2012

காதல் ! இது ! - காதல் கவிதை

உதயமும் ,அஸ்தமனமும் 
மூலம் அறியாத ஊற்று 

மதங்களும் ,நிறங்களும் இது 
மாறுபட்டது 

மனங்களால் தேர்த்தெடுக்கப்பட்ட 
மாறாத உறவு 

இன்னும் உறவுமுறைகளை கூட 
தலை முழிகி விடும் நிலை 

தோன்றி மறையும் மின்னல் போல 
தோற்றமும் இதன் பிரிவும் 

காதல் ! 

தேகம் வரை அல்ல வேகம் ! 
இறுதி வரை நல்ல நேசம் !! 



Bookmark and Share

Sunday, April 29, 2012

நான் வரு​வேன் - காதல் கவிதை


மலராத
மொட்டு
பகலவன் தீண்டாத
பனித் துளி
தூவாத மேகம்
ஏந்தி வருகிறேன்
உனக்கு
அரச்சனை செய்ய
காத்திரு
உன் இதயத்திற்கு
அருகில் வந்து நிற்பேன்.....


Bookmark and Share

Saturday, April 7, 2012

அவள் மட்டும் இன்னும் பேசவே இல்லை... - காதல் கவிதை


அவளின் கண்கள் என்னிடம் பேசின!... 
அவளின் மௌனம் என்னிடம் பேசின!... 
அவளின் கைகள் என்னிடம் பேசின!... 
அவளின் பாதங்கள் என்னிடம் பேசின!.. 
ஏனோ தெரியவில்லை.......
அவள் மட்டும் இன்னும் பேசவே இல்லை! 



Bookmark and Share

Sunday, March 4, 2012

உன் சிரிப்பில் - காதல் கவிதை


உன் சிரிப்பில்
உதிரும்
முத்துப்பரல்களை விடவா
காணாமல் போன
கால் கொலுசு
கவிதை பாடிவிடப்போகிறது?

காத்திருந்து காத்திருந்து
நீயும், நானும்
எத்தனையோ முறை
ஏமாந்து போனாலும்
காத்துக்கிடக்கிறது
நமக்காக காதல்.

அமுதம் சிந்தும் வார்த்தைகள்
மட்டுமின்றி அவ்வப்போது
நஞ்சும் கக்குகிறாய்
ஆனாலும்
எப்போதும் எனக்கு
மாணிக்கம் நீ.

உன்னைக் காணும் முன்வரை
அரிச்சந்திரனாய் இருந்தேன்
என்பதை நம்பாத நீ
அடுக்கடுக்காய்
அவிழ்த்து விடும்
பொய் மூட்டைகளை மட்டும்
எப்படி ரசிக்கிறாய்?


Bookmark and Share

Thursday, February 23, 2012

உன் நினைவுகளால் - காதல் கவிதை

வாடிய இதயம்
மீண்டும் துளிர்த்தது
உன் வார்த்தைகளை
கண்டு....

புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை 
கண்டு....

அதனால்

இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம் 
என் பார்வைகளில்..... 
                      


Bookmark and Share

Tuesday, February 21, 2012

அது என் உயிர் - காதல் கவிதை

உன் அன்பே.
என் வெளிச்சம்

உன் காதல்
எனக்கு காவல்

உன் பேச்சு..
எனக்கு..இன்பம்

உன் குரல்..
என் தேடல்

உன் நலம்.
என் நிம்மதி

உன் நிம்மதி.
என் சந்தோசம்

உன் உயிர்...
அது என் உயிர்.

Bookmark and Share

Popular Posts