எல்லையாய் கோடாய்
இருக்குதே சுதந்திரம்
இருப்போர்க்கு நிலைத்திடவே...
எலலையிலே சுதந்திரம் இல்லாமலே
வீடு விட்டு, நாடு விட்டு
தன்னலத்தை பொதுவிலிட்டு
போராடுவோர் பலருண்டு...
எல்லையில்லாமல், போராடாமல்
சுதந்திரமாய் அவரும் இருக்கும் தினமே
உண்மையாய் சுதந்திர தினம்...
ஜெய்ஹிந்த்!
என் சுதந்திரம்
எல்லையிலே இருக்குது
எட்டிப்பார்த்தில்லை...!
வீட்டுப் பூட்டில் இருக்குது
திறந்து விட்டதில்லை...!
மனதிலிருக்குது
பகிர்ந்ததில்லை...!
நாட்டு ஏழ்மையிலிருக்குது
எண்ணிப்பார்த்தில்லை...!
உணர்விலெல்லாம் இருக்குது
உணர்த்திக்கொண்டதில்லை...!
கேட்ட சொல்லிலிருக்குது
சொல்லிக்கொண்டதில்லை...!
வரலாறாய் இருக்குது
வாழ்ந்ததில்லை...!
கிடைத்ததில் இருக்குது
விட மனமில்லை....!
எல்லையிலே சுதந்திரம்
இன்று வரை எல்லையாய் இருக்குது சுதந்திரம்...
எல்லை மீறாதிருக்க மீண்டுருக்கும்...
எல்லை மாறாதிருக்க நமக்கிருக்கும்...
மற்றவர் எல்லை நமக்கு புரிந்திருக்க,
எல்லாருக்கும் என்றும் நிலைத்திருக்கும்...
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment