Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Tuesday, August 14, 2012

சுதந்திர தினம் - சுதந்திர தினம் கவிதை

எல்லையாய் கோடாய்
இருக்குதே சுதந்திரம்
இருப்போர்க்கு நிலைத்திடவே...

எலலையிலே சுதந்திரம் இல்லாமலே
வீடு விட்டு, நாடு விட்டு
தன்னலத்தை பொதுவிலிட்டு
போராடுவோர் பலருண்டு...

எல்லையில்லாமல், போராடாமல்
சுதந்திரமாய் அவரும் இருக்கும் தினமே
உண்மையாய் சுதந்திர தினம்...

ஜெய்ஹிந்த்!



என் சுதந்திரம்

எல்லையிலே இருக்குது 
எட்டிப்பார்த்தில்லை...!

வீட்டுப் பூட்டில் இருக்குது 
திறந்து விட்டதில்லை...!

மனதிலிருக்குது 
பகிர்ந்ததில்லை...!

நாட்டு ஏழ்மையிலிருக்குது 
எண்ணிப்பார்த்தில்லை...!

உணர்விலெல்லாம் இருக்குது 
உணர்த்திக்கொண்டதில்லை...!

கேட்ட சொல்லிலிருக்குது 
சொல்லிக்கொண்டதில்லை...!

வரலாறாய் இருக்குது 
வாழ்ந்ததில்லை...!

கிடைத்ததில் இருக்குது 
விட மனமில்லை....! 


எல்லையிலே சுதந்திரம்

இன்று வரை எல்லையாய் இருக்குது சுதந்திரம்...
எல்லை மீறாதிருக்க மீண்டுருக்கும்...
எல்லை மாறாதிருக்க நமக்கிருக்கும்...
மற்றவர் எல்லை நமக்கு புரிந்திருக்க,
எல்லாருக்கும் என்றும் நிலைத்திருக்கும்...


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts