Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, April 7, 2010

மறக்க முடியவில்லைக் காதலா

மறக்க முடியவில்லைக்
காதலா
உன்னை மறக்க முடியவில்லை
உன் மீது கொண்ட காதல்
என் உயிரையும் தாண்டி வாழ்கிறதே
காதலா
உன்னைக் காதல் கொண்ட நாள் முதலாய்
உனக்கே உயிராய் வாழ்கிறேனே நான்
இதயம் துடிக்க மறந்துவிட்டால்
உயிர் வாழ முடிவதில்லைக் காதலா
உந்தன் நினைவுகளை மறந்துவிட்டால்
இதயமாய்த் துடிதுடிப்பேன் நானல்லவா
நீயில்லா உறக்கத்தில் கூட உன்னைக்
காணக் கனவைக் கண்டதில்லை நான்
காதலா
உன்னோடு வாழாத உலகில் பிணமாய்
வாழும் உயிர் வேண்டாம் எனக்கு
கவி எழுதக் கற்றுக் கொடுத்த உன்
வார்தைகள் கூட இன்னும் என் காதலை
ஆழமாய் சொன்னதில்லைக் காதலா
யார் கவிக்குள்ளும் சிக்கும் வார்த்தையா நீ
காதலா
யாரலும் எழுத முடியாத காவியமல்லவா நீ

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts