Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, April 21, 2010

மனசு திருடி

ஊடலுடன் தொடங்கும்
பாசங்குத் தனமான
பொய் கோபமும்
அபிநயங்களுடன் கூடிய
உன் போலியான
அழுகையும் புன்னகையும்
எனை விட்டு நீ
தள்ளி தூரமாயிருந்தாலும் கூட
கனவுலகத்திற்கு
பிரஜையாக்குகின்றன
என்னை.

உன்
செயல்களிலும் பார்வைகளிலும்
பிரதிபலிக்கும் கிறுக்குத்தனத்தையும்
எனை வெறுப்பேற்றும்
சின்னச் சின்ன சீண்டல்களையும்
ரசித்து வைக்கிறேன்
உன் மீதான
நேசத்தில்.

பேசி சிரித்து
விடை பெற்று கைஆட்டி
போகும் போது
வாசலுக்குச் சென்று
தூரப்பார்வையால்
எனை அளக்கும் போது
சொல்லித் தா!
மனசை திருடும் கலையை.

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts