ஊடலுடன் தொடங்கும்
பாசங்குத் தனமான
பொய் கோபமும்
அபிநயங்களுடன் கூடிய
உன் போலியான
அழுகையும் புன்னகையும்
எனை விட்டு நீ
தள்ளி தூரமாயிருந்தாலும் கூட
கனவுலகத்திற்கு
பிரஜையாக்குகின்றன
என்னை.
உன்
செயல்களிலும் பார்வைகளிலும்
பிரதிபலிக்கும் கிறுக்குத்தனத்தையும்
எனை வெறுப்பேற்றும்
சின்னச் சின்ன சீண்டல்களையும்
ரசித்து வைக்கிறேன்
உன் மீதான
நேசத்தில்.
பேசி சிரித்து
விடை பெற்று கைஆட்டி
போகும் போது
வாசலுக்குச் சென்று
தூரப்பார்வையால்
எனை அளக்கும் போது
சொல்லித் தா!
மனசை திருடும் கலையை.
பாசங்குத் தனமான
பொய் கோபமும்
அபிநயங்களுடன் கூடிய
உன் போலியான
அழுகையும் புன்னகையும்
எனை விட்டு நீ
தள்ளி தூரமாயிருந்தாலும் கூட
கனவுலகத்திற்கு
பிரஜையாக்குகின்றன
என்னை.
உன்
செயல்களிலும் பார்வைகளிலும்
பிரதிபலிக்கும் கிறுக்குத்தனத்தையும்
எனை வெறுப்பேற்றும்
சின்னச் சின்ன சீண்டல்களையும்
ரசித்து வைக்கிறேன்
உன் மீதான
நேசத்தில்.
பேசி சிரித்து
விடை பெற்று கைஆட்டி
போகும் போது
வாசலுக்குச் சென்று
தூரப்பார்வையால்
எனை அளக்கும் போது
சொல்லித் தா!
மனசை திருடும் கலையை.