Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, April 21, 2010

மனசு திருடி

ஊடலுடன் தொடங்கும்
பாசங்குத் தனமான
பொய் கோபமும்
அபிநயங்களுடன் கூடிய
உன் போலியான
அழுகையும் புன்னகையும்
எனை விட்டு நீ
தள்ளி தூரமாயிருந்தாலும் கூட
கனவுலகத்திற்கு
பிரஜையாக்குகின்றன
என்னை.

உன்
செயல்களிலும் பார்வைகளிலும்
பிரதிபலிக்கும் கிறுக்குத்தனத்தையும்
எனை வெறுப்பேற்றும்
சின்னச் சின்ன சீண்டல்களையும்
ரசித்து வைக்கிறேன்
உன் மீதான
நேசத்தில்.

பேசி சிரித்து
விடை பெற்று கைஆட்டி
போகும் போது
வாசலுக்குச் சென்று
தூரப்பார்வையால்
எனை அளக்கும் போது
சொல்லித் தா!
மனசை திருடும் கலையை.

Bookmark and Share

நேசி

நேசி

எனை நேசி

இல்லா விட்டால்

உன்னையாவது நேசி,

உனக்குள் இருக்கும்

எனக்காக.

Bookmark and Share

Wednesday, April 7, 2010

ஏன் பிரிந்தாய்…!

பத்து மாதம் சுமந்து பெற்ற
தாய் மடி போலே உன்
மடியை சுவாசித்தேன் நானடா
சுவாசித்த என் நெஞ்சம்
நடந்தது புரியாமல்
ஏங்கியது ஏனடா
காதல் வலையை வீசி
ஏனடா என்னை
சிக்கவைத்தாய் காதலா
உன் வலைக்குள் சிக்கிய
என் இதயத்தை ஏனடா
நெருப்பில் சுட்டுவிட்டாய்
நீ சுட்ட என் இதயம்
உன் பெயரை
சொல்கிறது பாரடா
ஏனெனில்
என் இதயமே நீயடா
பால் குடிக்கும் குழந்தைபோலே
பச்சைப் பசும் சோலை போலே
என் உயிரிலும் மேலானதடா
என் காதல்
பருவத்தில் வரும் காதல்
என எண்ணி உன் கர்வத்தின்
கையால் கிள்ளி எறிந்த காரணத்தை
சொல்லடா
உனக்கா பிறந்தேன் என எண்ணி
என் உள்ளம் கால் முதல் உச்சிவரை
உன் உருவததை வரைந்த பாவி அல்லவா
நான்
சற்று சிந்தித்துப் பாரடா
என் அன்பின் ஆழம்
புரியவில்லையா உனக்கு
என் காதலை நெஞ்சிலே சுமந்து
உன் உருவத்தை என் உயிரினில்
வரைந்தேனடா
ஏனடா ஏனடா
என்னைப்  பொய்யாக்கி
பாவம் செய்கிறாய் நீயடா
பரிட்சை எழுதும் நேரத்தில்
கண்ணுக்குள் ஏன் வந்தாய் காதலா
உன்னைப் பார்த்த கண்கள் கடல்போல்
கண்ணீரை பெருக வைத்தது ஏனடா
பரிட்சையே என்னால் எழுதாமல்
போனது ஏனடா
கண்ணாடி இதயமடா எனக்கு
அதை கீழே போட்டு உடைத்தது
எதற்கு
என் உயிர் உள்ளவரை
உன் முகம் மறையாது
காதலா
உயிரோடு இருந்தால்
என் கண்கள் உன்னைக்
காணாது
நீ என்னை
திரும்பிப் பார்ப்பாயடா
காதலா
நீ பார்க்கும் வேளையிலே
உனக்காகவே
ஒரு காதல் சின்னம்
காத்திருக்கும் பாரடா
அது என் கல்லறைதானடா
முடிந்தால் காதலா
உன்னால் முடிந்தால்
ஒரு பூ
உன் காதலிக்காக அல்ல
உன்னைக்
காதலித்ததிற்காக வைத்துவிடு

Bookmark and Share

உன்னை முதல் முதலாக பார்த்தபோது

உன்னை முதல் முதலாக பார்த்தபோது – என்
மனம் ஏனொ உன்னிடம் பேசச்சொன்னது
நாம் ஒரே தாய் வயிர்ரில் பிறக்கவில்லை – இருந்தும்
நீ எனக்கு அக்காதான்
உன்னொடு பெசிய பொது வந்த சந்தொசம் – கடவுள்
னேரில் வந்திருந்தால்கூட கிடைதிருக்காது
நான் தூங்கும் போது உன் மடி வேன்டுமடி -நான்
அளும்பொது தலை சாய உன் தொல் வேண்டுமடி
உன்னை நினைத்து ஒரு நாள் – விளியொரம்
கண்ணீரும் சிந்தியது
என் பாசம் உன்மையானத என்று நீ கேட்டாய் – அந்த
நிமிடம் ஏனொ என் இதயம் உடைந்து விட்டது
உன்னை பாற்க்க என் கண்கள் துடிக்குதடி – அது
முடியாது என்று தெரிந்து என் மனம் ஆறுதல் சொல்லுதடி
உன்னை போல் ஒரு அக்கா கிடைக்க – என்ன
தவம் நான் செய்துவிட்டேன்
கடவுள் வந்து எனிடம் வடம் கேட்டால் – உன்
தன்கயாக பிறக்க வடம் கேட்பென்
உனற்வோடு கலந்த உறவுகல் – லட்சம்
பல உலகில் உன்டு
உயிற்ரொடு கலந்த உறவு – உன்னை
தவிர வேறு யாரும் இல்லை
உன்னிடம் எதயும் நான் மறைத்ததில்லை – பொய்
என்ற வாற்த்தை உன்னிடம் சொன்னதில்லை
நீ என்னை விட்டு பிரிந்தாலும் – என்
நாபகம் எண்றும் உன்னை விட்டு பிரியாது
உன் மீது ஏனொ கோவம் வருவதில்லை – உன்
மீது பாசம் வைக்க என் மனம் மறுத்ததில்லை
ஒரு முறையாவது என்னை அடித்துவிடு – உன்னைவிட
நான் உன்மீது வைத்த பாசத்தின் ஆளம் புரியும்
என் உயிற் உள்ளவரை உன்னோடு பேசவேன்டும் – உன்னோடு
பேசுவதற்க்காய் என் உயிராக  இருக்க வேண்டும்.

Bookmark and Share

மறக்க முடியவில்லைக் காதலா

மறக்க முடியவில்லைக்
காதலா
உன்னை மறக்க முடியவில்லை
உன் மீது கொண்ட காதல்
என் உயிரையும் தாண்டி வாழ்கிறதே
காதலா
உன்னைக் காதல் கொண்ட நாள் முதலாய்
உனக்கே உயிராய் வாழ்கிறேனே நான்
இதயம் துடிக்க மறந்துவிட்டால்
உயிர் வாழ முடிவதில்லைக் காதலா
உந்தன் நினைவுகளை மறந்துவிட்டால்
இதயமாய்த் துடிதுடிப்பேன் நானல்லவா
நீயில்லா உறக்கத்தில் கூட உன்னைக்
காணக் கனவைக் கண்டதில்லை நான்
காதலா
உன்னோடு வாழாத உலகில் பிணமாய்
வாழும் உயிர் வேண்டாம் எனக்கு
கவி எழுதக் கற்றுக் கொடுத்த உன்
வார்தைகள் கூட இன்னும் என் காதலை
ஆழமாய் சொன்னதில்லைக் காதலா
யார் கவிக்குள்ளும் சிக்கும் வார்த்தையா நீ
காதலா
யாரலும் எழுத முடியாத காவியமல்லவா நீ

Bookmark and Share

Popular Posts