என்னவளே, பிரியமானவளே, நேசத்திற்குரியவளோ
என்னை நான் உணரவைத்த அன்புக்குரியவளே
என்னை நான் நேசிக்க நீதான் காரணமடி
எனக்காகத்தான் பிரம்மன் உனை படைத்தானோ
என் உயிரும் உன் உயிரும் ஒன்றென உணர்ந்தேனே
பிரிவென்பது நமக்கில்லை இரண்டென்பதும் நமக்கில்லை
அன்பின் புனிதம்தன்னை உன் மூலம் உணர்ந்தேனே
கனவிலும் கவிதை எழுத காரணம் நீ தானே
கடவுள் வாழ்கின்றார் என, உன் அன்பில் உணர்ந்தேனே
வாழ்கையின் அர்த்தத்தை உன் காதலில் அறிந்தேனே
வாழ்வின் சொர்க்கத்தை உணரவைத்த தேவதையே
வாழ்வின் உயிரோடு கலந்த என் உறவே - விலைமதிப்பற்ற
வாழ்க்கைப் பயணத்தில் என்னோடு என்றும் இருப்பாயோ
அன்பு வார்த்தையில்லை உயிரிலும் மேலான உணர்வு நீதானே
அமுதும் தேனும் எதற்கு நீ என் வாழ்வில் ஒளி வீசும் போது
அன்பே கடவுள் என உணரவைத்த என் வாழ்வில் வசந்தமே
அகிலமும் போற்றும் அன்பு எம் காதலில் மேன்மை பெறும்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment