Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, August 2, 2010

அன்பின் இருப்பிடமே… - காதல் கவிதை

என்னவளே, பிரியமானவளே, நேசத்திற்குரியவளோ 
என்னை நான் உணரவைத்த அன்புக்குரியவளே 
என்னை நான் நேசிக்க நீதான் காரணமடி 
எனக்காகத்தான் பிரம்மன் உனை படைத்தானோ 
என் உயிரும் உன் உயிரும் ஒன்றென உணர்ந்தேனே 

பிரிவென்பது நமக்கில்லை இரண்டென்பதும் நமக்கில்லை 
அன்பின் புனிதம்தன்னை உன் மூலம் உணர்ந்தேனே 
கனவிலும் கவிதை எழுத காரணம் நீ தானே 
கடவுள் வாழ்கின்றார் என, உன் அன்பில் உணர்ந்தேனே 

வாழ்கையின் அர்த்தத்தை உன் காதலில் அறிந்தேனே 
வாழ்வின் சொர்க்கத்தை உணரவைத்த தேவதையே 
வாழ்வின் உயிரோடு கலந்த என் உறவே - விலைமதிப்பற்ற 
வாழ்க்கைப் பயணத்தில் என்னோடு என்றும் இருப்பாயோ 

அன்பு வார்த்தையில்லை உயிரிலும் மேலான உணர்வு நீதானே 
அமுதும் தேனும் எதற்கு நீ என் வாழ்வில் ஒளி வீசும் போது 
அன்பே கடவுள் என உணரவைத்த என் வாழ்வில் வசந்தமே 
அகிலமும் போற்றும் அன்பு எம் காதலில் மேன்மை பெறும்

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts