Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, December 2, 2010

நீ ரொம்ப அழகானவள்' - காதல் கவிதை

*அழகான பொருட்களெல்லாம் உன்னை 
நினைவுபடுத்துகின� �றன. உன்னை 
நினைவுபடுத்துகிற எல்லாமே 
அழகாகத்தான் இருக்கின்றன. 

*உன்னிடம் பேச எவ்வளவு 
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை 
உன்னிடம் பேசுபவர்களிடமும் 
பேசவேண்டும் என்பதில். 

*ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக் 
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக் 
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல் 
காட்டியதெனக்கு. 

*சோம்பல் முறிக்கையில் எவ்வளவு 
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம் 
பேசிக்கொண்டிருக்� �ையில் எவ்வளவு 
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட 
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில் 
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ. 



*அந்தக் காலையில் திரும்பிக்கூடப் 
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து 
போனாய் நீ. அதனாலென்ன ... வாசலுக்குள் 
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே உன் 
நிழல். 

*நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவ� �். 
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன் 
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக் 
கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு 
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக் 
கொண்டு போகிறாயே. 

*எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும் 
என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும் 
வைத்திருக்கிறாய். 

*நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என் 
தோள்களில் யார்யாரோ து¡ங்கிச் சாய்கிறார்கள் 
பயணத்தில். 

*என்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என் 
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல் 
போனால் கூட ஒன்றுமில்லை. 

*சூரியனை ஒரு முறைகூட முழுசாகப் 
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன் 
என்பதில் எப்போதும் சந்தேகம் 
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை 
பார்த்திருக்கிறே� �். ஆனால் உன்னைப் 
பார்த்துக்கொண்டி� �ுக்கும்போதே நீ தானா நீ 
என்கிற சந்தேகம் மட்டும் வந்து 
கொண்டேதான் இருக்கிறது. 

*'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள் 
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா 
என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து 
கொள்கிற நேரம்கூட உன்னை நான் 
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்த� �னே உன் 
கண்கள். 


Bookmark and Share

Sunday, November 21, 2010

என் காதலை பிடித்தால் என்னையும் பிடிக்கும் - என் காதல்


நினைவுகள் உன்னை
காதலிக்கின்றன..
உணர்வுகள் ஒன்றித்து
உறவாடுகின்றன..
மனம் மட்டும் மறுக்கிறதே
நான் உன்னை காதலிப்பதை!!


நடக்கையில் நிழலை
தேடினேன்...
காணவில்லை..!!
நிஜத்தில் நான்
உன்னுள் இருப்பதாலோ!!



விடிவெள்ளி உன்
கண்ணில்
உறங்குவதாலோ கண்ணே..
நாள் முழுதும் உன் முன்னே
விழித்திருக்கிறேன்..!!

காதல் பிடித்த
எனக்கு
உன்னையும் பிடித்தது...
உனக்கு-என்
காதலை பிடித்தால்
என்னையும் பிடிக்கும்..!!

உங்கள் விருப்பங்கள் ஓட்டுகளாக..
விமர்சனங்கள் பின்னூட்டல்கலாக..!!



Bookmark and Share

Thursday, August 5, 2010

பிரார்த்தனை - காதல் கவிதை

பெண்ணைக் கட்டி அணைத்திடவும்
பூவிதழ் தன்னை சுவைத்திடவும்
ஒன்றி வீடு சுகம் பெறவும்
விழைந்தேன் என்னை இழந்தேன் நான்!


என்னைக் கட்டி அணையுங்கள்
இதழில் உம்சுவை அளியுங்கள்!
ஒன்றி வீடு சுகம்பெறவே
விழைந்தேன் என்னை இழப்பேன் நான்!

Bookmark and Share

Wednesday, August 4, 2010

காமம் கடந்து...! -காதல் கவிதை

உன் நுனிவிரல் நகம் படவும்
தாவணி நூல் தொடவும்
கடந்து வருவேன் பலநூறுமைல் 

காற்றும் பாரா இடம் பார்த்து
காத்திருப்பாய் காதல் வளர்க்க

நான் எதிர்பார்த்திருந்த
அந்த எதிர்பாராத தருணத்தில்
சற்றே விலகிமூடும் உன் மாராப்பு

கணப்பொழுதின் காட்சி விழுங்கி
உள்ளே மிருகமாய் வெளியே மனிதனாய்
அமர்ந்திருக்கும் என் நாகரீகம்
உன் நற்சான்றிதழ் பெற

என் பார்வைக்கே சிவக்கும்
உன் பசலை பச்சை உடல்

காதலில் பூத்த காமம்
திருமணத்தில் கனிந்து
பின்நசுங்கியது
வாழ்க்கையின் நெரிசலுக்குள்

திருப்தியில்லாத செரிமானங்களுடன்
வாழ்கிறது மனம் வயிறைப் போலவே
எரிச்சல்களின் எச்சங்களோடு

பெருத்தநம் உடல் காட்டி
கனவுகளைத்தகர்க்கிறது கண்ணாடி

இன்றும் உடை மாற்றுகிறோம்..
ஒரேஅறைக்குள் கனத்த மௌனத்துடன்
அவரவர் உடல் பார்த்து

வெளியில் விளையாடும்
நம் குழந்தைகள் நலம்கருதி..!

Bookmark and Share

Tuesday, August 3, 2010

உன் நினைவோடு... நானிங்கு - காதல் கவிதை

நீ அங்கு...
நான் இங்கு...

நாம் வாழும் வாழ்க்கையின்
இருப்பிடம் வெவ்வேறு

உணர்வுகள் உளறலாய்
வெளிப்படும் இரவுகள்
கழிவது எவ்வாறு

பறக்கும் இறகினுள்
முகம் மறைத் தழுதிடும்
பறவையைப் பார்த்தாயா...

நானும் அதுபோல்
அழுதுடும் காட்சியைப்
பார்த்தால் ஏற்பாயா...

கானல் நீ....ராகா
வாழ்க்கையில் சேர்வோம்
ஒன்றாகும் நேரம்
கனவிலும் வாழ்வோம்

கரம் பற்றி
நான் அணைப்பேன்
காத லினால்
நீ நனைப்பாய்

உன்னில் வாழும்
நாட்களிலேதான்
உவகை கொள்கின்றேன்

உயிரே உன்னைச்
சேர்வதற்காக
உலகையே எதிர்க்கின்றேன்


Bookmark and Share

Monday, August 2, 2010

அன்பின் இருப்பிடமே… - காதல் கவிதை

என்னவளே, பிரியமானவளே, நேசத்திற்குரியவளோ 
என்னை நான் உணரவைத்த அன்புக்குரியவளே 
என்னை நான் நேசிக்க நீதான் காரணமடி 
எனக்காகத்தான் பிரம்மன் உனை படைத்தானோ 
என் உயிரும் உன் உயிரும் ஒன்றென உணர்ந்தேனே 

பிரிவென்பது நமக்கில்லை இரண்டென்பதும் நமக்கில்லை 
அன்பின் புனிதம்தன்னை உன் மூலம் உணர்ந்தேனே 
கனவிலும் கவிதை எழுத காரணம் நீ தானே 
கடவுள் வாழ்கின்றார் என, உன் அன்பில் உணர்ந்தேனே 

வாழ்கையின் அர்த்தத்தை உன் காதலில் அறிந்தேனே 
வாழ்வின் சொர்க்கத்தை உணரவைத்த தேவதையே 
வாழ்வின் உயிரோடு கலந்த என் உறவே - விலைமதிப்பற்ற 
வாழ்க்கைப் பயணத்தில் என்னோடு என்றும் இருப்பாயோ 

அன்பு வார்த்தையில்லை உயிரிலும் மேலான உணர்வு நீதானே 
அமுதும் தேனும் எதற்கு நீ என் வாழ்வில் ஒளி வீசும் போது 
அன்பே கடவுள் என உணரவைத்த என் வாழ்வில் வசந்தமே 
அகிலமும் போற்றும் அன்பு எம் காதலில் மேன்மை பெறும்

Bookmark and Share

Sunday, August 1, 2010

என் இதயத்தில் நீ - காதல் கவிதை

மலர்ந்த மலரானது இறக்கும் வரை
அதன் வாசனை
மலரைவிட்டு நீங்குவதில்லை
இதயத்தில் மலர்ந்த காதல்
இதயம் இறக்கும் வரை
இதயத்தைவிட்டு நீங்குவதில்லை

உள்ளத்தால் உறவாகி
உணர்வுக்குள் நினைவாகி
கனவுக்குள் கவிதையாகி
கவிதைக்குள் காதலாகி
வந்து விழுந்தாயடி காதல் விதையாய்
என் இதயத்தில்

காதல் விதையாய் வந்த நீ
என் இதயத் துடிப்போடு சேர்ந்து வளர்கிறாய்
என்னுள் இதயத் துடிப்பு இருக்கும் வரை
என் இதயத்தில் வாழ்ந்திடுவாய்


என்னில் இதயம் ஒன்று இருக்கும் வரை
என்னில் இருந்து உனை யாரலும் பிரிக்க முடியாது
ஏனெனின்
என் இதயத்தின் துடிப்போடு சேர்ந்து விட்டாய் நீ

உடலில் இதாயம் என்பது ஒன்றுதான்
என் இதயத்தில் வாழ்பவள் ஒருத்தி மட்டும் தான்
அது
நீ மட்டும் தான் என் காதலியே

நீ இதயத்தில் வாழும் வரை
என் உடலை உருக்கி
உன்னை வாழ வைப்பென்
நீ இதயத்தில் வாழும் வரைதான்
இந்த உடலும் இருக்கும்
இதயத்தில் துடிப்பும் இருக்கும்

இறுதி துடிப்பை துடித்து
தன் துடிப்பை நிறுத்திகொள்ளும் வேளையிலும்
உன்னை நேசிக்குமடி என் இதயம்


Bookmark and Share

Saturday, July 31, 2010

நிழல்களும் காதலிக்கும் - காதல் கவிதை

பல நாட்களாய்
நானும் நீயும்
நடந்து சென்ற வேளை
உன் நிழலும்
என் நிழலும்
நம் பின்னே
நடந்து வந்தன.

அதில்
உன் நிழல் பிரிந்து வந்து
எனக்கு பின்னும்
என் நிழல் பிரிந்து வந்து
உனக்கு பின்னும்
எமை தொடர்ந்தன.

சில நாட்களாய்
எம் நிழல்கள்
எமைக்கேட்டன
“உங்களை பிரிந்து
நாமும் காதலிக்கலாமா” என்று….

அதற்கு
நாமும் சம்மதித்தோம்.
ஓர் நாள்;
நானும் நீயும்
நடந்து சென்ற வேளை
எம் நிழல்களை காணவில்லை
காரணம்-எம்
காதலைக்கண்ட நிழல்கள்
தாமும் காதல் செய்ய
எமைப்பிரிந்தன.

இன்று
உனக்கும் நிழலில்லை
எனக்கும் நிழலில்லை
நாம் நிழல்களற்ற
மனிதராகி விட்டோம்.
ஏய் பெண்ணே !
நிழல்களும் காதலிக்கும் என்று
உன்னை காதலித்த பின்பு தான்
கற்றுக்கொண்டேனடி.

உண்மைக்காதலரின் நிழல்கள்
எப்போதும் பேசும், காதலிக்கும்.
ஆதலால்
மானிடனே !
நீயும் காதலித்துப்பார்
உன் நிழலும் பேசும் காதலிக்கும்



Friday, July 30, 2010

காதலின்றி வேறில்லை - காதல் கவிதை

பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி 
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

ஓடிவந்து என் 
கழுத்தைக் கட்டிக்கொண்டு 
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது 
எனக்கான காதல்புன்னகை!

Bookmark and Share

Popular Posts