Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Saturday, December 31, 2011

அவளின் பிறந்த நாள் - காதல் கவிதை,


பூவுக்கு பிறந்த நாளாம்!
புத்தாடை போர்த்திக்கொண்டது…
பூவிலும் அவள்
மல்லிகையோ ரோஜாவோ அல்ல..
அது வாடி விடும்.
அவளோ வாடா மல்லி
என்றென்றும் “வாடா மல்லி “!


Bookmark and Share

Tuesday, December 6, 2011

என் டைரி - காதல் கவிதை

உன்னை பார்த்த நாள் முதல்,
என்னிடம்,
என் டைரி கோபித்துக்கொண்டது.
எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.
என் மனச்சுமை குறைவது தெரியாமல்……


விண்மீன்களை கண்களாக்கினான்,
சந்தனத்தை தோலாக்கினான்,
பளிங்கை உடலாக்கினான்
ஆனால்,
இதயம் மட்டும் கல்லாக்கிவிட்டானே!


பூக்கடையில்,
ஒவ்வொரு பூக்களும் அழகழகாய் இருந்தன,
நீ வரும் வரையில்!
புத்தகக்கடையில்,
ஒவ்வொரு புத்தகமும் அரிதாய் இருந்தன
நீ தொடும் வரையில்!



Bookmark and Share

Monday, December 5, 2011

தனிமை - காதல் கவிதை

காதல் தீவிலே,
நிலமாய் நான்….
தனியாய் என்று வருந்தினேன்!
கடலாய் நீ…
அலையாய் வந்து மோதினாய்..





காதல் காவியம் - காதல் கவிதை


காதல் காவியம்
 
காதல் வானிலே,
வாழும் காவியம் நாம்.
நிலவாய் நீ,
ஒளியாய் நான்.

Popular Posts