Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, November 7, 2011

அவள் அழகுதான் - காதல் கவிதை


பிறைச்சந்திர
 மல்லிகை மொட்டுக்கள்
 உன் கூந்தல் ஆகாயமேற
 பூரணச் சந்திரன்கள்!

 உன் பாதங்கள்
 விட்டுச் சென்ற
 சுவடுகளில் எல்லாம்
 பட்டாம் பூச்சிகள்
 மொய்த்து கிடக்கின்றன!

 உன்
 கால் சுவட்டில்
 கால் வைத்து
 நடந்து வந்தேன்!
 திரும்பி பார்த்தால்
 கால் சுவடு
 இருந்த இடமெல்லாம்
 காதல் சுவடு!
 குளத்து நீருக்கு
 குனிந்து முத்தமிட்டபடி
 இருந்தவனை பார்த்தவர்கள்
 கவிஞனல்லவா ரசிக்கிறான்
 என்றவாறு நகர்ந்தார்கள்!
 அவர்களுக்கு எப்படித்தெரியும்
 குளித்துப் போன
 உன் பிம்பம்
 அதில் தங்கியிருப்பது!
 எல்லா ஊர் மீன்களும்
 பாசித் தின்று உயிர்வாழும்
 நம்மூர் மீன்கள் மட்டும்தான்
 உன் அழகை தின்று
 உயிர் வளர்க்கின்றதுகள்!
 நம்மூர் குளத்து
 தாமரை மட்டுமென்ன
 இவ்வளவு அழகென்பவளே!
 உஷ்!ரகசியம்!
 நீ குளிக்கையில்
 கரைந்த ஒருதுளி
 அழகுதான் காரணி!


Bookmark and Share

Saturday, November 5, 2011

உன் நினைவு - காதல் கவிதை

பல நேரங்களில்
எதையெதையோ நினைக்கிறது 
மனது..
நினைத்த எல்லாவற்றையும் 
சில தருணத்தில்
மறந்தும் விடுகிறது...
மறந்த ஒன்றும் நினைவுகளின்
சாயலில் மண்டியிட்டு அழுகிறது..
அழுகின்ற விஷயங்களை
தவிர்க்க துணிகின்ற நேரத்தில், 
மறந்தும் மறக்காமல்
வந்து விடுகிறது 
உன் நினைவு...


Bookmark and Share

Popular Posts