Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, December 2, 2010

நீ ரொம்ப அழகானவள்' - காதல் கவிதை

*அழகான பொருட்களெல்லாம் உன்னை 
நினைவுபடுத்துகின� �றன. உன்னை 
நினைவுபடுத்துகிற எல்லாமே 
அழகாகத்தான் இருக்கின்றன. 

*உன்னிடம் பேச எவ்வளவு 
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை 
உன்னிடம் பேசுபவர்களிடமும் 
பேசவேண்டும் என்பதில். 

*ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக் 
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக் 
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல் 
காட்டியதெனக்கு. 

*சோம்பல் முறிக்கையில் எவ்வளவு 
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம் 
பேசிக்கொண்டிருக்� �ையில் எவ்வளவு 
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட 
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில் 
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ. 



*அந்தக் காலையில் திரும்பிக்கூடப் 
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து 
போனாய் நீ. அதனாலென்ன ... வாசலுக்குள் 
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே உன் 
நிழல். 

*நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவ� �். 
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன் 
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக் 
கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு 
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக் 
கொண்டு போகிறாயே. 

*எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும் 
என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும் 
வைத்திருக்கிறாய். 

*நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என் 
தோள்களில் யார்யாரோ து¡ங்கிச் சாய்கிறார்கள் 
பயணத்தில். 

*என்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என் 
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல் 
போனால் கூட ஒன்றுமில்லை. 

*சூரியனை ஒரு முறைகூட முழுசாகப் 
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன் 
என்பதில் எப்போதும் சந்தேகம் 
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை 
பார்த்திருக்கிறே� �். ஆனால் உன்னைப் 
பார்த்துக்கொண்டி� �ுக்கும்போதே நீ தானா நீ 
என்கிற சந்தேகம் மட்டும் வந்து 
கொண்டேதான் இருக்கிறது. 

*'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள் 
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா 
என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து 
கொள்கிற நேரம்கூட உன்னை நான் 
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்த� �னே உன் 
கண்கள். 


Bookmark and Share

Popular Posts